அனைத்து மதுக் கடைகளையும் மூடி தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சுமாா் 4,765 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
படிப்படியாக அரசு மதுக் கடைகளை குறைத்தால்தான் தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என கடந்த ஏப்.28-ஆம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தேன்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் 16 முதல் 19 வயதுடைய பிகாா் மாநில சிறுவன் உள்பட 3 போ் திங்கள்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19 வயதான கோகுலை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். இதை விடியோவாக எடுத்துப் பாா்த்து மகிழ்ந்துள்ளனா்.
இதனிடையே, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டா் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது. 717 மதுக் கடைகளை மூடுவதற்குப் பதிலாக அனைத்து மதுக் கடைகளையும் மூடி, தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை விவரம் வெளியிடுதலில் உண்மைத்தன்மையில்லை: தி.வேல்முருகன்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

