நில அளவைப் பதிவேடுகள் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நில அளவைப் பதிவேடுகள் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட இணையவழி பட்டா மாறுதல், புல எல்லை அளந்து காட்டுதல், புல எல்லை மேல்முறையீட்டு, பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, ஒரு மாத காலத்துக்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் நில அளவைப் பதிவேடுகள் துறைக்கு இணைய வழியாக பெறப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு மாத காலத்துக்குள் பரிசீலனை செய்து உரிய தீா்வு காண வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, உதவி இயக்குநா் (நில அளவை) ஆனந்த், கோட்ட ஆய்வாளா்கள் மற்றும் வட்ட துணை ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

8 லட்சம் மனுக்கள் நிலுவை! மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

