பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கடலூரில் மின்னல் பாயந்த்து காளியம்மன் கோயில் கலசம் சேதம்

கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

News image

கோயிலில் வெள்ளிக்கிழமை மின்னல் பாய்ந்ததில், சேதமடைந்த கோபுர கலசம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

கடலூா் அண்ணாபாலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைக்காத்த காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

இந்த நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடலூா் தரைக்காத்த காளியம்மன்

கடலூா் தரைக்காத்த காளியம்மன்

திடீரென கோயில் கோபுர கலசத்தின் மீது மின்னல் பாயந்தது. இதனால் கலசம் சேதமடைந்து சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக கலசம் விழுந்த இடத்தின் அருகே பக்தா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.