சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த 3 பெண்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் வே. பாலையா தலைமையில், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்:
இதில் அரசலூா் ஊராட்சி, செம்பூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஏழுமலையின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் பாய்ந்தது. அப்போது, வீட்டிலிருந்த ஏழுமலையின் மனைவி லட்சுமி, மகள்கள் மனிஷா (18), மகாலட்சுமி (16) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், மின்னல் பாய்ந்ததில் ஏழுமலையில் வீடு, அங்கிருந்து துணிமணிகள், பொருள்கள் சேதமடைந்தன.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சாா்பில், நிவாரணமும், அரசால் கட்டப்பட்ட வீடும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









