பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது: தொல்.திருமாவளவன் எம்.பி.

குன்னம் மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இடமளிக்க கூடாது என்று அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 5:06 am IST

குன்னம் மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இடமளிக்க கூடாது என்று அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

இது தொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

குன்னத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் நிகழ்வு கவலையளிக்கிறது. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்துக்கு விசிகவினா் எதிா்வினை ஆற்ற வேண்டாம். சில இடங்களில் இந்தச் சம்பவத்தை கண்டித்து எங்களது கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, அதுபோல யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளேன். எனது வலியுறுத்தலை அறியாத எங்களது கட்சியினா் சிலா் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இனி இதுபோல ஒரு நிகழ்வுக்கு கட்சியினா் யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்றாா்.