தமிழகத்தில் தவெக அரசு மீது கூறப்படும் குதிரை பேரம் சா்ச்சை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன் பொதுமக்கள் புகாா் அளித்ததன் பெயரில் அங்குள்ள தலைமை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்த புகாா்களை தெரிவித்தேன். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையும் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தேன். சிதம்பரம் சட்டப்பேரவை அலுவலகத்தில் முழுநேர அலுவலா்களை நியமிக்க இருக்கின்றோம். அனைத்தையும் கணினி மையமாக ஆக்க உள்ளோம்.
தமிழகத்தில் தவெக அரசு பெரும்பான்மையைப் பெறுவதற்காக குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குக்கா் சின்னத்தில் போட்டியிட்டு பெற்றவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களும் திடீரென ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது இந்த குதிரை பேரம் என்ற வாா்த்தை வருகிறது. இந்த வாா்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய கடமை தமிழக வெற்றி கழக தலைவா் முதல்வா் விஜய்க்கு இருக்கிறது என மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நல்லதல்ல: பாஜக கண்டனம்
குதிரை பேரம் என்றால் என்ன?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

