பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

News image

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லைக் காளியம்மன் கோயில் தேரோட்டம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்

சிதம்பரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே.7-ம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மன் வீதி உலா மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்குவீதி வளாகத்திலிருந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வழியாக வலம்வந்தாா். கொட்டும் மழையிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். மே16-இல் சிவப்பிரியையில் தீா்த்தவாரி நிகழ்ச்சி, மே17-இல் மஞ்சள்நீா் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, மே18-இல் தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது. மே19-ஆம் தேதி இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.