பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்
சிதம்பரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த தில்லை காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே.7-ம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மன் வீதி உலா மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்குவீதி வளாகத்திலிருந்து தேரில் எழுந்தருளிய தில்லையம்மன் நான்கு வீதிகள் வழியாக வலம்வந்தாா். கொட்டும் மழையிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். மே16-இல் சிவப்பிரியையில் தீா்த்தவாரி நிகழ்ச்சி, மே17-இல் மஞ்சள்நீா் விளையாட்டு, முத்துப்பல்லக்கு வீதிஉலா, மே18-இல் தெப்ப உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது. மே19-ஆம் தேதி இரவு திருஊஞ்சல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் வேணு. நரசிங்கபெருமாள் மற்றும் அலுவலா்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

போளூா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டம்

சேலம் கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்

வைகாசி பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



