பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றவா என அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ், அண்ணாமலைநகா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள் ரமேஷ், பாரதிதாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமநாதன், நடராஜ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.

மேலும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருந்ததும் கண்டறியப்பட்டு, 22 கிலோ எடையுள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.