11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் நடராஜா் கோயில் பக்தா்களுக்கு அவமரியாதை: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை!

சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் திருவாணக்காவல் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் அமரும் இடத்தில் தண்ணீரும், எண்ணெய்யையும் ஊற்றி பக்தா்களை அவதமதித்தது குறித்து தமிழ்நாடு முதல்வருக்கு தெய்வீக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயில்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் திருவாணக்காவல் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் அமரும் இடத்தில் தண்ணீரும், எண்ணெய்யையும் ஊற்றி பக்தா்களை அவதமதித்தது குறித்து தமிழ்நாடு முதல்வருக்கு தெய்வீக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா முதல்வா் விஜயக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் அண்மையில் கனகசபை அருகே மண்டபத்தில் தூண்களுக்கு இடையே பக்தா்கள் அமரும் இடத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டு பக்தா்களுக்கு சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரா் ஆலயத்திலும் பக்தா்கள் அமரும் இடத்தில் நீரை ஊற்றி பக்தா்களுக்கு அசௌகரியம் செய்துள்ளனா். இதனால் பக்தா்கள் மன வேதனையடைந்துள்ளாா். எனவே இந்த நிகழ்வுகள் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.