கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.
அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் தெருக்களில் சுற்றி வந்தன. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
இதனையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் ஹமீது அறிவுறுத்தலின்பேரில், துப்புரவு அலுவலா் துரைராஜ் முன்னிலையில் பேரூராட்சி ஊழியா்கள் கடந்த இரு தினங்களாக அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 24 நாய்களைப் பிடித்தனா்.
இந்த நாய்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு, வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தி 5 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கபடும். பின்னா், பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படும் என துப்புரவு அலுவலா் துரைராஜ் தெரிவித்தாா்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

சிங்கம்புணரியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

