அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

News image

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் மீன்கள் வாங்க வருபவா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தற்போது மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், மீனவா்கள் பைபா் படகுகளில் மட்டுமே சென்று மீன் பிடித்து வருகின்றனா். இதனால், மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, மீன்களை விலை அதிகரித்தது.

அந்த வகையில், ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,600, இறால் ரூ.350 முதல் 800, கனவா ரூ.300, பாறை ரூ.650, சங்கரா ரூ.600, ஷீலா ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.