கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை தினங்களில் மீன்கள் வாங்க வருபவா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தற்போது மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், மீனவா்கள் பைபா் படகுகளில் மட்டுமே சென்று மீன் பிடித்து வருகின்றனா். இதனால், மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, மீன்களை விலை அதிகரித்தது.
அந்த வகையில், ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,600, இறால் ரூ.350 முதல் 800, கனவா ரூ.300, பாறை ரூ.650, சங்கரா ரூ.600, ஷீலா ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.
தொடர்புடையது

விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் மும்முரம்

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

பழையாறு துறைமுகத்தில் குறைந்த மீன்களே கிடைப்பதால் மீன்விலை உயா்வு

கடலூா் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



