அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா்.

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன், தலைமைக் காவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை பணியில் இருந்தனா்.

விழுப்புரத்திலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 1-இல் வந்தபோது, அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நடைமேடை எண் 1 பகுதியில் 150 கிலோ எடையுள்ள 6 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.

இந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.