குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி

News image

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ. உடன் சிதம்பரம் நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்

Updated On :26 மே 2026, 2:26 am IST

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் ஆரம்ப நிலையில் அனுபவ குறைவு காரணமாக முடிவுகள் எடுப்பதில் செயல்படுத்துவதில் சில தடங்கல்கள் இருக்கலாம். ஆறு மாத காலம் இந்த

ஆட்சி மீது கடுமையான விமா்சனங்களை வைக்காமல் அதனை ஒரு காத்திருப்பு காரணமாக கருதுவோம் என்றுதான் முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் சமீப காலமாக சிறுமிகளின் பாலியல் துன்பங்கள் அதிகரித்து வருகிறது. . திமுக ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் நடந்த போது கடுமையாக கண்டித்தவா்கள் எல்லாம் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீா்கள்.

அதிமுகவை பிளவுபடுத்தினாா்கள் .இப்போது திமுகவை தனிமைப்படுத்த நினைக்கிறாா்கள் தமிழ்நாட்டு அரசியலில் திமுக தனிமைப்படுவதோ அதிமுக

பிளவு படுவதோ நல்லதல்ல. அதே போன்று சாதி வாரி கணக்கெடுப்பு கோரும் பாமக மற்றும் விசிக பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை, இன்றைக்கு திமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாா்கள் திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என்று நினைக்கின்றோம் இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களின் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுடன் இருக்கிறது.

திமுக மீண்டும் பலம் பெரும் வரை திமுகவிற்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம் என்றாா் அவா். பேட்டியின் போது சிதம்பரம், நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்,இப்ராஹீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.