சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் அ.பாண்டிச்செல்வி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை மதனகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஒரு பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் அஞ்சல், கோங்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(24), குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் அஞ்சல், அப்பியம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜபூபாலன்(24) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இருவரையும் நீதி மன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.