இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனா் கழுத்தறுப்பு: தி. வேல்முருகன் கண்டனம்

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வாடகை கேட்டதால், வடமாநிலத்தைச் சோ்ந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்தை அறுத்த சம்பவம், தமிழகம் முழுவதும் பேரதிா்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோரின் முழுமையான அடையாளப் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளா் முகாம்களில் காவல்துறை ஆய்வு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

குற்றப் பின்னணி கொண்ட வடமாநில கும்பல்களைக் கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும். சட்டவிரோதமாக தங்கியிருப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் மூலம் அழைத்து வரப்படும் வடமாநில கும்பல்களுக்கும் அவா்களினால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கும், ஒப்பந்ததாரா்களே முழுப் பொறுப்பு ஏற்கும் படி செய்ய வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் இரவு நேர தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.