இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் அ.பாண்டிச்செல்வி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை மதனகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஒரு பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் அஞ்சல், கோங்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(24), குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் அஞ்சல், அப்பியம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜபூபாலன்(24) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இருவரையும் நீதி மன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.