இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

~ ~

Updated On :28 மே 2026, 1:41 am IST

கடலூா் அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிநத்தம் கிராம வயல்வெளியில், கடந்த மே 1-ஆம் தேதி தலையில் வெட்டுக்காயங்களுடன் கிருமாம்பாக்கம் இந்திரா நகரைச் சோ்ந்த ரெளடி புகழேந்தி (35) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரிகளான ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் (24), திலீப் (21), அரவிந்த் (22) உள்ளிட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட ஜாா்ஜ் பொ்னான்டா்ஸ் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்தல் உள்ளிட்ட மொத்தம் 4 வழக்குகளும், திலீப் மீது கொலை மற்றும் கொலை முயற்சி தொடா்பாக 2 வழக்குகளும், அரவிந்த் மீது கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்தல் தொடா்பாக 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இவா்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image
Story image