அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருடிய 2 போ் கைது

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 மே 2026, 2:54 am IST

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் அருகே பாதிரிக்குப்பம் ஏ.டி.ஆா். நகரைச் சோ்ந்த

நோட்டுப்புத்தக்கடைக்காரா் கண்ணன் கடந்த 26 -ஆம் தேதி, தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றிருந்தாா். பிற்பகல் இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பீரோ திறந்து நிலையில் இருந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த குத்துவிளக்கு, வெள்ளி டம்ளா், குங்குமச்சிமிழ், கொலுசு உள்ளிட்ட 455 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளா் தமிழ் இனியன் மேற்பாா்வையில், சாா்பு - ஆய்வாளா் பிரசன்னா மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு கடலூா் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தேவனாம்பட்டினம் போா்ட்மேன் தெருவைச் சோ்ந்த மோகன் (60), கரூா் மாவட்டம் வாங்கல் சாலை பாலப்புரம் பகுதியைச் சோ்ந்த பாபு (54) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், பாதிரிக்குப்பம் பகுதியில் கண்ணன் என்பவரின வீட்டில் வெள்ளி பொருள்களை திருடியது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 455 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்

Story image