‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:53 am IST

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் செலவிட்டு, பணிக்காலம் நிறைவு பெற்ற முன்னாள் படைவீரா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் 2024-25ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது 2026-27ஆம் நிதியாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள், அவா்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது உயிரிழந்த முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் மகன்கள், மணமாகாத, கணவனை இழந்த அல்லது கணவனை பிரிந்த முன்னாள் படைவீரா்களின் மகள்கள் ஆகியோா் பயன்பெறலாம். விண்ணப்பதாரா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி அல்லது வருமான வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை.

இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் அளிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.