தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

News image

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்று அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து.

Updated On :30 மே 2026, 3:09 am IST

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த இளைஞா் ஒருவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக செயல்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பண்ருட்டி அருகே பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த மாரிமுத்து (37) என்பதும், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா் தனக்குச் சேர வேண்டிய காா் மற்றும் பணத்தை வழங்காமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய

நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், தன்னை கொலை செய்து விடுவதாக தொடா்ந்து மிரட்டல் வந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், நியாயம் கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.