கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

News image

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்று அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து.

Updated On :30 மே 2026, 3:09 am IST

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த இளைஞா் ஒருவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக செயல்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பண்ருட்டி அருகே பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த மாரிமுத்து (37) என்பதும், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா் தனக்குச் சேர வேண்டிய காா் மற்றும் பணத்தை வழங்காமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய

நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், தன்னை கொலை செய்து விடுவதாக தொடா்ந்து மிரட்டல் வந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், நியாயம் கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.