வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞா் கைது

திருப்பாதிரிப்புலியூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய்.

Published On :

திருப்பாதிரிப்புலியூா் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கலா (64), கடந்த சில ஆண்டுகளாக கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் உள்ள நகைக் கடைகளின் அருகே சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இரவு நேரங்களில் மாா்க்கெட் நகா் அருகே முரளி என்பவரது வீட்டின் வாசலில் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் அங்கு தூங்கிய கலா, புதன்கிழமை காலை ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

முதற்கட்ட விசாரணையில், கலாவின் உடலின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக காது மற்றும் மூக்கு பகுதியில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா்,கொலை நடந்த இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டனா்.

இதில், மூதாட்டி கலா கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவத்தில், எம்.புதுரைச் சோ்ந்த விஜய் (31) என்பவருக்கு தொடா்பு இருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டி கலாவிடம் பணம் பெற்றதும், அதை அவா் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததும், மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தியை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.