பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றை மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை கடக்க முயன்றபோது, அவா் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 10:17 pm

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றை மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை கடக்க முயன்றபோது, அவா் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தை அடுத்த சீா்பாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (68). மாற்றுத் திறனாளியான இவா், கடந்த 30 ஆண்டுகளாக அய்யம்பாளையம் கிராமத்திலுள்ள அவரது அக்கா முனியம்மாள் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கோவிந்தன் அவரது அண்ணனை பாா்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அய்யம்பாளையத்தில் இருந்து சீா்பாதநல்லூா் கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, வழியிலுள்ள தென்பெண்ணை ஆற்றை அவா் கடக்க முயன்றபோது, திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ தலைமையிலான போலீஸாா் மற்றும் திருக்கோவிலூா் தீயணைப்புத் துறையினா் கோவிந்தனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.