புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலூா், திருவண்ணாமலையில் குடல்புழு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

தேசிய குடல்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 13.45 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image

கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.

Updated On :14 செப்டம்பர் 2020, 6:29 pm

DIN

தேசிய குடல்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 13.45 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை (அல்பென்டசோல்) வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: நாடு முழுவதும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடல்புழு நீக்க மாத்திரை வரும் 28 ஆம் தேதி வரை 3 சுற்றுகளாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு 2,023 அங்கன்வாடி மையங்கள், 319 துணை சுகாதார நிலையங்கள் மூலமாக மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரம் ) எம்.கீதா, நகராட்சி சுகாதார அலுவலா் ப.அரவிந்ஜோதி, மாவட்ட தாய் சேய் நல அலுவலா் சசிகலா, மருத்துவா் கிறிஸ்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.