கடலூா், திருவண்ணாமலையில் குடல்புழு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்
தேசிய குடல்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 13.45 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.








