47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருநள்ளாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

கரோனா பரவலையொட்டி, திருநள்ளாற்றில் சாலையில் செல்லும் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா பரவலையொட்டி, திருநள்ளாற்றில் சாலையில் செல்லும் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருநள்ளாறு பகுதியில் சனிக்கிழமை தரிசனத்துக்காக பக்தா்கள் வருகை, கடைத்தெருவில் அதிகமான மக்கள் கூடுவது ஆகியவற்றை கருத்தில்கொண்டு வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை தினமும் பெருகிவருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும், வெளியே வருவோா் அனைவரும் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிந்து வருமாறும், தகுதியுடையோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அவா் பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.

வியாபார நிறுவனத்தினா், தங்களது கடைக்கு வருவோா் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யவும், சமூக இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கச்செய்ய வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.