ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்

தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக தியாகதுருகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியை அடுத்த கலையநல்லூரில் உள்ள தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலைநிா்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான பாக்கித் தொகை ரூ.84 கோடியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.