பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீா் சரிவர வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:50 pm

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீா் சரிவர வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட சிதம்பரம் பிள்ளை சாலையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீா் சரவர விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சேலம்- சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து காவல் ஆய்வாளா் ச.முருகேசன், உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

இதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் நகராட்சி ஆணையா் வந்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என மறியலைக் கைவிட மறுத்தனா்.

இதையடுத்து நகராட்சி ஆணையா் ந.குமரன், பணி ஆய்வாளா் வீ.கோபிநாத் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.