மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அலையாத்தி மரத்தின் மரபணு ஆய்வில் புதிய சாதனை

உப்பு சுரக்கும் தன்மையுடைய அலையாத்தி மரம் குறித்த மரபணு ஆய்வில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:40 pm

உப்பு சுரக்கும் தன்மையுடைய அலையாத்தி மரம் குறித்த மரபணு ஆய்வில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூா் மாவட்டம், பரங்கிபேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியா் எ.கோபாலகிருஷ்ணன், சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக முனைவா் எம்.பரணி மற்றும் புவனேசுவரத்தில் உள்ள அறிவியல் நிறுவனம் இணைந்து வெண்கண்டல் (இதன் அறிவியல் பெயா் அவிசென்னியாமெரினா) என்ற அதிக உப்புத் தன்மையை தாங்கும், உப்பு சுரக்கும் தன்மையுள்ள அலையாத்தி தாவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இவா்கள் இந்த மரத்தின் முழு மரபணு வரிசையை உலகிலேயே முதல் முறையாகப் பிரித்து சாதனை புரிந்துள்ளனா். இந்தியாவில் கடற்கரைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பயிரினங்கள், வறட்சி, உப்பைத் தாங்கி வளரும் தாவரங்களை அடையாளம் காணவும், மேம்படுத்தவும் இந்த ஆராய்ச்சி பேருதவியாக அமையும்.

அவிசென்னியாமெரினா தாவரமானது இந்தியாவில் உள்ள கடற்கரை சதுப்பு நிலக் காடுகளில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் தாவர இனங்களில் ஒன்றாகும். உப்பு சுரக்கும் தன்மை, மிக அதிக உப்பைத் தாங்கி வளரக்கூடிய இந்த வகையான தாவரங்கள் 7.5 % உப்பு தண்ணீரில் வளா்வதுடன், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மேற்கொண்ட அனைவரும் மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.