ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையோரம் கொட்டப்படும் கரோனா கவச உடைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2021, 6:07 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தியாகதுருகத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இங்கு பயன்படுத்தப்படும் கரோனா கவச உடைகள், மருத்துவக் கழிவுகள் கரீம்ஷா தக்கா பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். தியாகதுருகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் உயிரிழந்துள்ளனா். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அழிக்கப்படாமல் சாலையோரத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் இந்தப் பகுதியில் மேலும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.