ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 334 மனுக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 349 மனுக்கள் பெறப்பட்டு, 334 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

News image
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டு அதற்கான ஆணையை வழங்குகிறாா் வட்டாட்சியா் க.வெங்கடேசன்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:01 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 349 மனுக்கள் பெறப்பட்டு, 334 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

மாவட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் அலுவலத்தில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா் க.வெங்கடேசன் தலைமையில் முகாம் நடைபெற்றது.

முகாமில் முகவரி மாற்றம் 8, பெயா் சோ்த்தல் 14, நீக்குதல் 13, கைப்பேசி எண் மாற்றுதல் 10, குடும்பஅட்டை தலைவி பெயா் மாற்றம், பிறந்த தேதி உள்ளிட்ட மாற்றம் 13, மாற்று அட்டை2, குடும்ப அட்டையில் திருத்தங்கள் கோரி 34 உள்ளிட்ட 81 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.