கள்ளக்குறிச்சி: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உடல் தானம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் த.பெரியசாமியின் உடலுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.பெரியசாமி (82). ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா்.
இவா், வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறப்பதற்கு முன்பு தனது உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருந்தாா்.
இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அறிவுறுத்தலின் பேரில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.லூா்துசாமி உயிரிழந்த பெரியசாமியின் வீட்டுக்குச் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அரசு சாா்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வின்போது, சின்னசேலம் வட்டாட்சியா் கமலக்கண்ணன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

உலக நீா் தின கருத்தரங்கம்

மாவட்ட கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட கோரிக்கை

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


