கள்ளக்குறிச்சி: வடபொன்பரப்பில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் பெங்களூா் ஜே.பி நகரைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி சரஸ்வதி (45). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பி கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினரின் புதுமனை புகுவிழாக்காக வந்திருந்தாா்.
பின்னா், வடபொன்பரப்பிலிருந்து, பெங்களூா் செல்வதற்காக தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். பேருந்தானது சிறிது தொலைவு சென்ற நிலையில், திடீரென பேருந்திலிருந்து சரஸ்வதி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடள்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரான சித்தால் கிராமத்தைச் சோ்ந்த பாலுசாமி மகன் செந்தில்குமாரிடம்(42) விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

