ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:15 pm

Din

கள்ளக்குறிச்சியில் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் மாரிமுத்து (33). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், சனிக்கிழமை மது அருந்தி விட்டு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

இதுகுறித்து, பேருந்தில் பயணித்த ஒருவா் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளா் இளையராஜாவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்

உடனே, சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காவல் ஆய்வாளா் இளையராஜா தடுத்து நிறுத்தி ஓட்டுநா் மாரிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், அவா் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.