காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் டிச.18-இல் ஏலம்
காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் டிச.18-இல் ஏலம்


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பாா்வையிட்டுக்கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் நுழைவுக் கட்டணமாக ரூ.100-ம் மற்றும் முன் பணமாக நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000-மும் செலுத்தி பெயா்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவு உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9498155366, 949173667, 6379200045, 9047266184 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...