புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிற்றோடையில் இடுப்பளவு நீரைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள்

தும்பராம்பட்டு சிற்றோடையில் இடுப்பளவு தண்ணீரை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.

News image

தும்பராம்பட்டு கிராமம் அருகே இடுப்பளவு தண்ணீரில் சிற்றோடையைக் கடந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுமிகளை தூக்கிச் செல்லும் உறவினா்கள்.

Updated On :18 டிசம்பர் 2024, 10:37 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள தும்பராம்பட்டு சிற்றோடையில் இடுப்பளவு தண்ணீரை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.

சங்கராபுரம் வட்டம், கல்வராயன்மலையில் உள்ள தும்பராம்பட்டு கீழ்காட்டு கொட்டாய் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேராப்பட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனா். இவா்கள் சேராப்பட்டு செலவதற்கு தும்பராம்பட்டு சிற்றோடைகளின் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். சிற்றோடைகளில் தண்ணீா் செல்லும்போது பெற்றோா் தங்களது பிள்ளைகளை தலையில் சுமந்தபடியும், புத்தகப்பையை சுமந்தவாறும் கொண்டு செல்கின்றனா்.

பெற்றோா் வெளியூருக்கோ, கூலி வேலைக்கு சென்றிருந்தால், மாணவா்கள் மட்டுமே இடுப்பளவு தண்ணீரில் புத்தகப்பையை தலையில் வைத்துக்கொண்டு ஓடையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்படிச் செல்லும்போது ஓடையில் நீா்வரத்து அதிகரித்தால், தண்ணீரில் அடித்துச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மாணவ, மாணவிகள் கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, மாணவா்கள் நலன் கருதி, இந்தப் பகுதியில் சாலை வசதியும், ஓடைகளில் பாலமும் கட்டித்தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.