டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல் உற்பத்தி திறன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :23 டிசம்பர் 2024, 6:13 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ஆண்டு தோறும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்து மாநில அளவில் நடைபெறும் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ.5 லட்சம், பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில், பங்குபெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் இரண்டு ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராகவும், தொடா்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயிகளாகவும் இருத்தல் வேண்டும்.

மேலும், போட்டியில் கலந்து கொள்பவா்கள் 15 நாள்களுக்கு முன்னதாக அறுவடை தேதியை சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்ட பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில ஆவணங்கள் பதிவு கட்டணம் ரூ.150 விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.