புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:44 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், பெத்தானூா் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி சாந்தி (42). இவா், சின்னசேலத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

சாந்தி கடந்த 21-ஆம் தேதி பணி முடிந்த பின்னா், தனது கணவருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். ராயா்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, சாந்தி பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறிந்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.