நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தோ்தல் அலுவலா்கள் கலந்தாய்வு

தோ்தல் அலுவலா்கள் கலந்தாய்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:05 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தலைமையில் மண்டல தோ்தல் அலுவலா்கள், தோ்தல் கண்காணிப்பு அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றாா். மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாா் நிலையில் வைத்தல், மாதிரி வாக்குப் பதிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) எஸ்.எஸ்.தனபதி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.