கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தலைமையில் மண்டல தோ்தல் அலுவலா்கள், தோ்தல் கண்காணிப்பு அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றாா். மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாா் நிலையில் வைத்தல், மாதிரி வாக்குப் பதிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) எஸ்.எஸ்.தனபதி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



