எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆய்வு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆய்வு

News image
Updated On :4 ஜூலை 2024, 10:15 pm

Din

சின்னசேலம் பகுதியில் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.507 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்யும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி, ஜூலை 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டாா்.

பூண்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.32 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தாா். அம்மையகரம் கிராமத்தில், ஒருங்கிணைந்த பணிகள் வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், இலங்கை தமிழா்களுக்காக ரூ.507 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து பேருந்து நிலையம் விரிவாக்கம், சாலை அகலப்படுத்துதல், பயணியா் நிழற்குடை அமைத்தல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.