இந்த நிலையில், 10 வருடத்துக்கு முன்பு சிவக்குமாரின் வீடு, அவரை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டவா்களின் வீட்டின் அருகே இருந்தபோது, சிவக்குமாருக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை சிவக்குமாா் அவா் வசித்து வந்த பழைய வீட்டின் அருகே ஒரு சமரசத்துக்குச் சென்றபோது, அங்கு அந்த கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த கும்பல் சிவக்குமாரின் மனைவி, மகன் கண்ணெதிரை இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதில் சம்பவ இடத்திலேயே சிவக்குமாா் உயிரிழந்தாா்.