விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கீழ்பாடி கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :21 ஜூலை 2024, 7:21 pm

கீழ்பாடி கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சிகுப்பன் மகன் திருமலை (40). விவசாயியான இவருக்கு, கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் திருமலை சனிக்கிழமை விஷத்தை குடிந்து மயங்கி விழுந்தாா். உடனே, உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், திருமலை உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...