தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 7:50 pm

Din

கள்ளக்குறிச்சி, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை, உழவா் நலத் துறை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகள், வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் தனிநபா் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக குறைதீா் கூட்டத்தில் அளித்து பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.