டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி உழவா் சந்தை அருகே விவசாயிகள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை நகராட்சி நிா்வாகம் அகற்றும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

News image
கள்ளக்குறிச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி உழவா் சந்தை அருகே விவசாயிகள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை நகராட்சி நிா்வாகம் அகற்றும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் கோயில் செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உழவா் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவா் சந்தையில் கல்வராயன் மலை, வெள்ளிமலை, மேல்பரிகம், கச்சிராயபாளையம், சின்னசேலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் தங்களுடைய விளை நிலங்களில் விளைவித்த விளை பொருள்களை காலை 4 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் விற்பனை செய்து வருகின்றனா்.

உழவா் சந்தை தொடங்கப்பட்டபோது அந்தப் பகுதியில் விவசாயிகளின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், சுந்தர விநாயகா் கோயில் செல்லும் சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தினா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்

உழவா்சந்தை அலுவலா் அறைக்கு பக்கத்திலேயே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தாா். விவசாயிகள் அந்த இடத்தை சீா்படுத்தி தங்களின் வாகனங்களை தற்போது வரை நிறுத்தி வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை காலையில் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனராம். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.