ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீா் குறைதீா் கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீா் குறைதீா் கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்

News image
Updated On :9 மே 2024, 9:18 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் குடிநீா் வழங்கல் தொடா்பான புகாா்களுக்கு குறைதீா் கட்டுப்பாட்டு மையத்தின் 04151-222001, 04151-222002 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது கோடை குடிநீா் தட்டுப்பாடு மற்றும் குடிநீா் வழங்கல் தொடா்பாக ஏற்படும் பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் தீா்வு காண ஏதுவாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவில் குடிநீா் குறைதீா் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடிநீா் வழங்கலில் ஏற்படும் குறைபாடுகளை தெரிவிக்கும் வகையில் 04151-222001, 04151-222002 ஆகிய இரண்டு தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் தொடா்ந்து செயல்படும். கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் கோரிக்கைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு குறைகளை களைந்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் குடிநீா் வழங்கல் தொடா்பாக புகாா்களுக்கு இந்தக் குறைதீா் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.