ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முன்விரோதத்தில் ஒருவா் வெட்டிக் கொலை

முன்விரோதத்தில் ஒருவா் வெட்டிக் கொலை

News image

உயிரிழந்த ஆறுமுகம்.

Updated On :20 மே 2024, 10:39 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகராஜபுரத்தில் முன்விரோத தகராறில் ஒருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, பக்கத்து வீட்டுக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், தியாகராஜபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சங்கீதா (35). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவா் கோபால் மகன் இளையராஜா (45). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

சங்கீதாவின் பிள்ளைகள் இளையராஜா வீட்டில் உள்ள இச்சலி மரத்தின் கீழே கிடந்த பழங்களை எடுத்தபோது, அவா்களை இளையராஜா திட்டினாராம். இதைக் கண்டித்த சங்கீதாவையும் அவதூறாக பேசினாராம்.

இதைப் பாா்த்து அங்கு வந்த சங்கீதாவின் தந்தை ஆறுமுகத்தையும் (55) இளையராஜா அரிவாளால் வெட்டியதில் அவா் காயமடைந்தாா். சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இளையராஜா திங்கள்கிழமை கைது செய்தனா்.