நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வளா்ச்சி திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு...

News image

சின்னசேலத்தில் புதிதாக அமையவுள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்துக்கான இடத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :6 நவம்பர் 2024, 11:36 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் அருகே உள்ள எலியத்தூரில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.2.72 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது நிலுவைப் பணிகளின் விவரங்கள், திட்ட மதிப்பீடு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட திட்டத் தொகை, நிலுவைத் தொகையின் விவரம், பணிகளை விரைந்து முடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு திட்டங்கள் முறையாக சென்று சோ்வதை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவா் அறிவுரை வழங்கினாா்.

மேலும், சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படவுள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தையும், சின்னசேலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்துக்கான இடத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.