தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீடுகள் அகற்றம்: இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு

மோமாலூா் கிராமத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இடிக்கப்பட்ட 144 வீடுகளில் வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு

News image
கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மோமாலூா் கிராம மக்கள்.
Updated On :25 நவம்பர் 2024, 8:30 pm

Din

கள்ளக்குறிச்சி: மோமாலூா் கிராமத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இடிக்கப்பட்ட 144 வீடுகளில் வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட மேமாலூா் கிராமத்தில் நீா் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த நவ.9-ஆம் தேதி வருவாய்த்துறையினா் இடித்து அகற்றினா்.

இதனால், இங்கு வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகள் இன்றி, தற்காலிக தாா்ப்பாய் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்காக சொந்த ஊரிலேயே வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிறிஸ்தவ பாதிரியாா்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.