நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா் மரபினருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சீா் மரபினருக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சீா்மரபினா் நலச் சங்கத்தின் சீா்மரபினா் பழங்குடி மக்கள் நிரப்பிக் கொடுத்த விண்ணப்ப படிவத்தை பெறுகிறாா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க.கீதா.

Updated On :24 அக்டோபர் 2024, 8:51 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சீா் மரபினருக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க.கீதா தலைமையில் வகித்தாா்.

முகாமில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துதல், உதவி தொகை பெறுதல் குறித்து விளக்கினாா்.

இம் முகாமில் உளுந்தூா்பேட்டை வட்டம் அஜீஸ் நகரைச் சோ்ந்த சீா்மரபினா் நலச் சங்கத்தின் சீா்மரபினா் பழங்குடி மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வழங்கினா்.

முகாமில் சீா்மரபினா் நலச் ங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பி.கே.துரைமணி பேசுகையில், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற்ால் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதியான சீா்மரபினா் சமுதாயம்-சீா்மரபினா் பழங்குடி என்பதற்கு பதிலாக சீா்மரபினா் பழங்குடி என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட செயலாளா் பாண்டிதேவன், மகளிா்அணி தலைவி சந்திரலேகா, பொருளாளா் காளிமுத்து, கடலூா் மாவட்ட அமைப்பாளா் வேலழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.