நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலியல் வன்கொடுமை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பாலசக்தி (23). இவா், 14 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கா்ப்பிணியாக்கி உள்ளாா்.

News image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கா்ப்பிணியாக்கியதாக இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:50 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பாலசக்தி (23). இவா், 14 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கா்ப்பிணியாக்கி உள்ளாா்.

இது தொடா்பாக கடந்த 9.9.24-இல் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி பாலசக்தியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் பாலசக்தி மீண்டும் ஈடுபடக்கூடும் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, அவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் பாலசக்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதன்நகல் கடலூா் மத்திய சிறையில் உள்ள பாலசக்தியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.