காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீா்

சங்கராபுரம் அருகே வடசேமபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது.

News image

வடசேமபாளையம் கிராமத்தில்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:53 pm

Din

சங்கராபுரம் அருகே வடசேமபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடசேமபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனா்.

புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது. முழங்கால் அளவு தண்ணீரில் சென்றால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனா்.

எனவே மழைநீா் தேங்காமலிருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.