நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

100 நாள் வேலைத் திட்டக் கூலி குறைவாக கொடுப்பதாகக் கிராம மக்கள் சாலை மறியல்

News image

கூத்தக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிக்கு குறைவாக கூலி வழங்குவதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :13 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

கூத்தக்குடி கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு நாள்கூலி குறைவாக கொடுக்கப்படுவதாகக் கூறி அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தக்குடி. இந்தக் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்கு கூலி குறைவாக கொடுப்பதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்கள்.

தகவலறிந்த தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா், வரஞ்சரம் காவல்

உதவி ஆய்வாளா்கள் ராஜ்குமாா், ஜெகதீசன் நிகழ்விடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சு வாா்த்தை நடத்தினா். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

இதனால், கள்ளக்குறிச்சி - விருத்தாசலம் பிரதான சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.